வியாழன், 16 ஜூன், 2011


நீ கல்லூரி சிட்டாய்
கலக்கிய காலம் முதல்
கனவுலகில் உன்னோடு
கைகோர்த்து நடந்தவன்...

உன் தாவணி காற்றினில்
தென்றலை சுவாசித்தவன்...
நீ சுடிதார் துப்பட்டாவிற்கு
மாறியபோது மூச்சடைக்க
மலைத்து நின்றவன்....

கரைந்தோடிய காலங்களை
சபித்துக்கொண்டு இன்னும்
காத்திருக்கிறேன் உனக்காக....
கண்ணீர் மழை மட்டும்
கரைத்துக் கொண்டிருக்கிறது என்னை..


கல் மனம் கொண்டவளா நீ?
உன் கல் மனதை செதுக்கி
என்னுருவை படைத்து விடுகிறேன்....
காலங்கள் பல கடந்தாலும்
கனியும் என் காதல்...

ஞாயிறு, 5 ஜூன், 2011


கொட்டும் மழை
கூரையை பிய்த்துக்கொண்டு
குடிசைக்குள் பெய்கிறது....
குளிரில் நடுங்கும் மழலைகள்,
நனையும் நாளைய உணவு பொருட்கள்....
என் வயித்தெரிச்சலுடன்
திட்டித்தீர்கிறேன் மழையையையும் கடவுளையும்.....

மழையும் தூவானமும்
நின்றபின் மழலைகள்
முகத்தில் மாசற்ற மகிழ்ச்சி...
அதே மகிழ்ச்சி எனக்குள்ளும்
வானவில்லை கண்டதும்...

நன்றியுடன் கடவுளை நினைக்கிறேன்

இன்னொரு மழைக்காலம் வரை
காத்திருக்க வேண்டும் வானவில்லை காண...